Skip to main content

கொரோனா தொற்றுக்கு முன் நாம் வாழ்ந்த இயல்பு வாழ்க்கைக்கு போக முடியுமா? சுந்தர் பிச்சை கருத்து.!

என நினைக்கிறேன்

கூகுள் நிறுவனம் தொடர்ந்து தரமான சேவைகளை வழங்கி வருகிறது, மேலும் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து தயாரிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது கொரோனாவின் வீரியம் பல இடங்களிலும் இன்னும் குறையாமல் இருப்பதால் பொது முடக்கமுமம் தனிமனித இடைவெளியும் இயல்புநிலை என்று ஆகிவிட்டது. 

இந்த நிலையில் பல நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் அறிவித்துள்ளது, வருங்காலத்தில் வேலை இப்படித்தான் இருக்குமா என்ற விவாதமும் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுகக்கு முன்பு இதுகுறித்து மைக்ரோசாஃப்ட் சிஇஒ சத்ய நாதெள்ளா அவர்களுகம் பேசியிருந்தார். தற்சமயம் இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் சிஇஒ சுந்தர் பிச்சையும் கருத்து தெரிவித்துள்ளார், பிரபல ஊடகமான The Wire-க்கு அளித்த பேட்டியில் கூகுள் நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற ஊழியர்களை அவ்வப்போது நேரில் சந்திக்க வேண்டியது மிகவும் அவசியம் என சுந்தர் பிச்சை அவர்கள் கூறியுள்ளார். 

மேலும் கொரோனா தொற்றுக்கு முன் நாம் வாழ்ந்த இயல்பு வாழ்க்கைக்கு ஒருபோதும் இனி திரும்பிச்செல்ல முடியாது என நினைக்கிறேன் என்றும் அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இந்த கோரோனா நோய்த்தொற்றால் வந்துள்ள பாதிப்பில் நம்மில் எவரும் கற்பனை செய்வதைவிட பெரியதாக இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்தவுடன்,முதலில் எங்கள் ஊழியர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க தீர்மானித்தோம் என்று அவர் கூறினார். எனவே ஆரம்பத்திலேயே எங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய நிர்பந்தித்தோம்.

 னவே ஆரம்பத்திலேயே எங்கள்

இருந்தபோதிலும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஊழியர்கள் நேரில் பார்த்துப் பேசிக்கொள்வது முக்கியம் என்றும், கூகுள் நிறுவனம் பல திட்டங்களை வைத்திருக்கிறது என்றும்,ஆனால் தற்போது இருக்கும் சூழலால் பாதைகள் மாறினாலும், அந்தத் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என நம்பிக்கையில் இருக்கிறோம் என்றும் சுந்தர் பிச்சை கூறியுள்ளார். அமேசான், பிளிப்கார்ட்டை ஓரம்கட்டும்  

The Wire-பேட்டியில், கொரோனாவுக்காக கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனம் இடையே உண்டாகியிருக்கும் கூட்டணி பற்றியும் பேசப்பட்டது,நாங்கள் இரு நிறுவனங்களுமே சுகாதார அமைப்புகளுக்கு உதவும் கான்டக்ட் ட்ரெஸிங் தொழில்நுட்பத்தையும் தனித்தினியே உருவாக்கத் தொடங்கிவிட்டோம். எனவே இது முழுமையான தீர்வு தருவதற்கு தனித்தனியாக வேலைசெய்தால் போதாது என்பதை இரு தரப்புமே உணர்ந்துவிட்டோம். 

நானும் டிம் குக்கும் நேரடியாகப் பேச வேண்டும் என முடிவுசெய்தோம்,இது சாத்தியமானது.Please help Ketto மேலும் இந்த தருணத்தில் பயனர்களின் ப்ரைவஸி பாதிக்கப்படாது என்ற உத்தரவாதத்தையும் நாங்கள் வழங்க வேண்டும் என்பதை உணர்ந்தோம். எனவே அதற்கேற்பதான் இந்தத் தொழில்நுட்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதை 10 முதல் 20சதவிகித பயனர்கள் பயன்படுத்தினால் கூட, அது அர்த்தமுள்ள தாக்கம் என சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.


Comments