கூகுள் நிறுவனம் தொடர்ந்து தரமான சேவைகளை வழங்கி வருகிறது, மேலும் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து தயாரிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது கொரோனாவின் வீரியம் பல இடங்களிலும் இன்னும் குறையாமல் இருப்பதால் பொது முடக்கமுமம் தனிமனித இடைவெளியும் இயல்புநிலை என்று ஆகிவிட்டது. இந்த நிலையில் பல நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் அறிவித்துள்ளது, வருங்காலத்தில் வேலை இப்படித்தான் இருக்குமா என்ற விவாதமும் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுகக்கு முன்பு இதுகுறித்து மைக்ரோசாஃப்ட் சிஇஒ சத்ய நாதெள்ளா அவர்களுகம் பேசியிருந்தார். தற்சமயம் இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் சிஇஒ சுந்தர் பிச்சையும் கருத்து தெரிவித்துள்ளார், பிரபல ஊடகமான The Wire-க்கு அளித்த பேட்டியில் கூகுள் நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற ஊழியர்களை அவ்வப்போது நேரில் சந்திக்க வேண்டியது மிகவும் அவசியம் என சுந்தர் பிச்சை அவர்கள் கூறியுள்ளார். மேலும் கொரோனா தொற்றுக்கு முன் நாம் வாழ்ந்த இயல்பு வாழ்க்கைக்கு ஒருபோதும் இனி திரும்பிச்செல்ல முடியாது என நினைக்கிறேன் என்றும் அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இந்த கோரோனா நோ